• RSS
  • Facebook
  • Twitter
Comments

சாமி முன்
படையலை வைத்ததும்
பந்திக்கு சென்றனர் பெரியவர்கள்.

சாமி இன்னும்
சாப்பிடலையேன்னு
பார்த்துக்கொண்டு நின்றது
குழந்தை. 

**********

எல்லோரும் நல்லாயிருக்க
வேண்ட சொல்லி
கற்று கொடுத்தாள் தாய்.
கடவுளுக்கும் சேர்த்து
வேண்டிக்கொண்டது
குழந்தை.

***********

குழந்தையாய் இருக்க
பிரியப்பட்டே
மீண்டும் மீண்டும்
பிறக்கும் கடவுள்,
வேண்டா வெறுப்பாய்
வளர்ந்து தொலைக்கிறார்.

**************

இரவு முழுதும்
ஒன்றாய் விளையாடுகிறார்கள் 
கடவுளும் குழந்தையும்;

காலையில்
குழந்தை கற்கவும்,
கடவுள் காக்கவும் செல்கிறார்கள்
விருப்பமில்லாமல்.

**************

8 Responses so far.

  1. அனைத்தும் அருமை.

    //குழந்தையாய் இருக்க
    பிரியப்பட்டே
    மீண்டும் மீண்டும்
    பிறக்கும் கடவுள்,
    வேண்டா வெறுப்பாய்
    வளர்ந்து தொலைக்கிறார்.//

    அனைத்திலும் அருமை.

  2. வாவ்..!
    நல்லாருக்குய்யா.

  3. உண்மை உண்மை லோகு

    கடவுளும் குழந்தையும் - அருமையான சிந்தனை

    நல்வாழ்த்துகள் லோகு

  4. Anonymous says:

    hi logu
    nalla iruku but
    ungalluku kathal kavithyi than ellutha nalla verum
    kathal kavithai pothu niraja naal aachu
    1 u plz

    thusy
    france


  5. @ துபாய் ராஜா:
    நன்றி அண்ணா!

    @ ராஜூ :
    நன்றி நண்பா!

    @வெற்றி-[க்]-கதிரவன்:
    நன்றி அண்ணா!

    @cheena (சீனா):
    நன்றி அய்யா!

    @ thusy:

    காதல் கவிதையா. நான் எழுதியதை படிச்சா எனக்கே காய்ச்சல் வர மாதிரி இருக்கு. So இப்போதைக்கு எழுதற எண்ணம் இல்லை பாஸ்.. :)

  6. //சாமி இன்னும்
    சாப்பிடலையேன்னு
    பார்த்துக்கொண்டு நின்றது
    குழந்தை.

    எல்லாக் கவிதையும் ரெம்ப நன்றாக இருக்கிறது.
    மனசே லேசான மாதிரி இருக்கிறது.

  7. Priya says:

    வித்தியாசமான சிந்தனை. அனைத்தையும் ரசித்து படித்தேன்!