• RSS
  • Facebook
  • Twitter
Comments



ஒவ்வொரு குறும்பிலும்,
தன் தாய்க்கு
அவளது பால்யத்தை
நினைவூட்டுகிறது
குழந்தை.

****

கனவில் விளையாடும்
தன் தேவதை தோழிகளை
பிரிய மனமில்லாமல்,
தினமும் காலையில் 
அழுகையோடு விழிக்கிறது குழந்தை!

****

திட்டிய அப்பாவை,
ரெட் ரேஞ்சர்சிடம்
சொல்லி விடலாமென
விசும்பும் தாயை
தேற்றுகிறது குழந்தை!

****

"பூச்சாண்டியிடம்
பிடித்து கொடுத்துடுவேன்"என்று
மிரட்டினாள் தாய்.

"கொடுத்துக்கோ!
எனக்கொன்னும் பயமில்லை"
என்றது குழந்தை!

அடுத்து
என்ன சொல்லி
மிரட்டுவது என தெரியாமல்
விழிக்கிறாள்,
தன் பால்யத்தில்
பூச்சாண்டிக்கு பயந்த தாய்!

****
பொம்மைகளின் மொழியில்
புலமையோடு பிறக்கும் குழந்தை,
புதுமொழி கற்கையில்
இழக்குது புலமை.

8 Responses so far.

  1. //கனவில் விளையாடும்
    தன் தேவதை தோழிகளை
    பிரிய மனமில்லாமல்,
    தினமும் காலையில்
    அழுகையோடு விழிக்கிறது குழந்தை//

    அருமையான உவமை லோகு.

    //திட்டிய அப்பாவை,
    ரெட் ரேஞ்சர்சிடம்
    சொல்லி விடலாமென
    விசும்பும் தாயை
    தேற்றுகிறது குழந்தை!//

    :))

    //பொம்மைகளின் மொழியோடு
    பிறக்கும் குழந்தை,
    கொஞ்சம் கொஞ்சமாய்
    பொம்மை மொழி மறந்து,
    மனித மொழி கற்று
    வளர்கிறது//

    பொம்மைகளின் மொழியோடு
    பிறக்கும் குழந்தை,
    வளர வளர
    பொய்மை மொழி கற்று
    கொஞ்சம் கொஞ்சமாய்
    பொம்மை மொழி மறக்கிறது.

    எப்ப்ப்பூபூபூடிடிடிடி..... :))

  2. எல்லாமே நல்லாயிருக்கு, லோகு.

    //பொம்மைகளின் மொழியோடு
    பிறக்கும் குழந்தை,
    கொஞ்சம் கொஞ்சமாய்
    பொம்மை மொழி மறந்து,
    மனித மொழி கற்று
    வளர்கிறது.//

    இதை கொஞ்சம் டிங்கரிங் செய்தால் இன்னும் அழகான கவிதையாயிருக்குமென்பது, என் கருத்து. தவறாக நினைக்க வேண்டாம்

  3. Anbu says:

    Kalakkal Machan


  4. @இரும்புத்திரை:
    நன்றி அண்ணா..

    @துபாய் ராஜா:
    நன்றி அண்ணா.. நீங்க சொன்னது கவிதை, நான் எழுதியது கவிதை முயற்சி! :)

    @முரளிகுமார் பத்மநாபன்:
    நன்றி அண்ணா.. உங்களை போன்றவர்களின் வழிகாட்டுதலில் தான் வளர்கிறேன்.


    @anbu:
    Thanks Mapla.

  5. நல்லாயிருக்கு பாஸ்..

  6. நல்லாருக்குங்க. வாழ்த்துகள்

  7. ஆகா அருமையான கவிதை வரிகள் .வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளம்பெற .மிக்க நன்றி பகிர்வுக்கு ....